
நெஞ்சு கனக்கும்
கசப்பான நிகழ்வுகளின்
தொகுப்புகள்…
கோரத்தாண்டவம் ஆடுகின்றன…
இருட்டடிப்புச் செய்யப்பட்ட
நினைவுகள்!
இரவு நேரங்களை..
இரணமாக்கிச் செல்கின்றன..?
இரட்டை வாழ்க்கை வாழ்வதாய்
மனசு கூறி..
மவுனித்துச் செல்கிறது..
கோரமான இரண்டு கால்
பிராணிகளின்
மத்தியில்
வாழ்க்கை நகர்த்துவது
விபரீதமாய் உள்ளது!
தந்தையிடம் தொலைத்த
முகவரியை….
கணவனுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்……
நானோ
நித்தமும்….
நிரந்தரமற்று அலைகிறேன்….!
வாழ்க்கை நகர்த்துவது
விபரீதமாய் உள்ளது!
தந்தையிடம் தொலைத்த
முகவரியை….
கணவனுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்……
நானோ
நித்தமும்….
நிரந்தரமற்று அலைகிறேன்….!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக