ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பிறகென்ன சொல்ல…



ஒரு நிமிடம் முடிவதற்குள்
மனதிற்குள்
ஓராயிரம் சிந்தனைகள்
பெண்ணாய் இருந்துவிட்டால்
ஒன்று
கருக்கலைப்பு…..
இல்லையேல்
கள்ளிப்பால் !

ஆட்டிற்கு இல்லை
மாட்டிற்கு இல்லை – ஏன்
பத்து குட்டிகளைப்
பாசமாய் ஈனும்
பன்றிக்கு இல்லை
இந்த ஈனப்புத்தி
அய்ந்திற்குப் பாசம் (அறிவு)
ஆறிற்கு வேசம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக