ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இனிய தோழனே!....



பெண்ணியம் பேசும்
உன்னைக் கூட
‘ஆண் தானே’
அப்படித்தான் இருப்பாய்
என்றிருந்தேன்!

விவகாரமாய்க்
கருதும் எனக்கு
நீ…
வித்தியாசமானவன்
என்பது
விளங்கவில்லை!

நட்பித்த நாள் முதல்
உன்னிடம் ஆளுமையில்லை
அடக்கமுறையில்லை!

என்னை அடிக்கடி
மெய்சிலிர்க்க வைத்தாய்
உந்தன் ஆழமான
சிந்தனையால்!

பிறகுதான்
எனக்கு உரைத்தது
நீ ஆணல்ல
நான் பெண்ணல்ல
நாம் மனிதர்களென்று !

1 கருத்து: